மேட்டூர்: நவப்பட்டி ஊராட்சியில், கடந்த சில நாட்களாக, செம்மறி ஆடுகளை குறி வைத்து திருடும் மர்ம கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். கொளத்தூர், நவப்பட்டி ஊராட்சி, செக்கானூரை சேர்ந்தவர் மாணிக்கம். கடந்த இரு வாரத்தில், இவரது பட்டியில் இருந்த நான்கு செம்மறி ஆடுகளை, மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை, 9:00 மணியளவில் இரு நபர்கள் மேலும் ஒரு ஆட்டை, பைக்கில் திருடி செல்வதை மாணிக்கம் பார்த்துள்ளார். இதுபோல, அதே பகுதியை சேர்ந்த உத்தரசாமி என்பவரின் ஆட்டையும், மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, மேட்டூர் போலீசார், ஆடு திருடும் கும்பலை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE