தர்மபுரி: ''கிராம கண்காணிப்பு போலீசார், தங்களது, 'வாட்ஸ் அப்' குழுவுக்கு தகவல் தெரிவிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,'' என, மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமார் பேசினார்.
தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியில் நடந்த, கிராம கண்காணிப்பு போலீசாருக்கான ஆலோசனை கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், குக்கிராமங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கிராம கண்காணிப்பு போலீசாரை நியமனம் செய்ய வேண்டும். அவர்களின் பணிகளை, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் பார்வையிட்டு, சீரான நடவடிக்கைக்கு கொண்டு வர வேண்டும். இதை டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையிட வேண்டும். கிராம விழிப்புணர்வு போலீசார் அனைத்து, ஜாதி, மதத்தினருடன் தொடர்பு கொண்டு, தகவல்களை சேகரிக்க வேண்டும். குறைந்தது, 100 பேர் கொண்ட, 'வாட்ஸ் அப்' குழுவை உருவாக்க வேண்டும். இக்குழுவில் உள்ளோர் தங்கள் பகுதி தகவலை தெரிவிக்கும்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கிராமங்களில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள், சமூக விரோதிகள் குறித்த தகவல்களை, தனி பட்டியல் தயாரிக்க வேண்டும். இக்குழுவினர், தங்களுக்கு ஒதுக்கிய கிராமங்களுக்கு, அடிக்கடி செல்வதுடன், அவர்களின் செயல்பாடுகள் தொலைபேசி, 'வாட்ஸ் அப்' வழியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், டி.எஸ்.பி., அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE