ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தி விட்டு, தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கவி நரசிம்மர் கோவில் தேரில் இருந்த, இரு அச்சாணிகளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வாலிபர் ஒருவர் திருடிச் ?சென்றார். நேற்று அதிகாலை மீண்டும் பைக்கில் வந்த அந்த வாலிபர், தேரில் இருந்த மற்ற இரு அச்சாணிகளை திருடிக்கொண்டு, தேர்ப்பேட்டை வழியாக தப்பினார். தகவலின்படி அவரை பிடிக்க, தேன்கனிக்கோட்டை போலீசார், லக்கசந்திரம் அருகே, வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும் படி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதப்பன், 19, என்பதும், அப்பகுதியை சேர்ந்த மணி, 31, என்பவரது பைக்கை திருடி, அதில், கோவில் தேர் அச்சாணிகளை திருடிச்சென்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்ய, போலீசார் முயன்றபோது, தன்னிடமிருந்த கத்தியால், எஸ்.ஐ., ஞானக்கண் ரகுநாதனை, இடது தொடையில் குத்தி விட்டு, போலீசாரை மீறி, மாதப்பன் தப்பினார். படுகாயமடைந்த எஸ்.ஐ., தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார், தப்பிச்சென்ற மாதப்பனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE