ஓசூர்: கெலமங்கலம் அருகே, ஒசபுரம் கிராமத்தில், மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்த பயிற்சி நடந்தது. கெலமங்கலம், வட்டார வேளாண் துறை மூலம், ஒசபுரம் கிராமத்தில், அட்மா திட்டத்தில், தமிழ்நாடு நீடித்த நிலையான, மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து, விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. கெலமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜான்லூர்து சேவியர், மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வேளாண் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர் தனலட்சுமி, சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் குறித்தும், கிருஷ்ணகிரி தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் பரசுராமன், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர். உதவி வேளாண் அலுவலர் சுந்தர்ராஜ், மண்வள அட்டையின் பரிந்துரையின்படி, உரமிடுதல் குறித்தும், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் கீதா, விதை நேர்த்தி செய்யும் முறை மற்றும் அதன் பயன்கள் பற்றியும் விளக்கி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE