கிருஷ்ணகிரி: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுக்கு போட்டியாக, தி.மு.க.,வினர் பேனர் வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு, அரிசி வாங்கும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும், 2,500 ரூபாய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 லட்சத்து, 13 ஆயிரத்து, 318 ரேஷன் கார்டுகளுக்கு, பொங்கல் பரிசுதொகுப்பு நேற்று முதல், வழங்கப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் நகரில், 10க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளின் அருகில், நேற்று பேனர்கள் வைத்துள்ளனர். அதில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடந்த ஒரு ஆண்டாக கொரோனா காலத்தில் தவித்து வரும் தமிழக மக்களுக்கு, 5,000 ரூபாய் வழங்கக்கோரி, தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், தமிழக அரசு பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. மீதமுள்ள, 2,500 ரூபாயையும் சேர்த்து, 5,000 ரூபாயாக வழங்க கேட்டுக்கொள்கிறோம்' இவ்வாறு அந்த பேனர்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE