கோவை: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன், 26; மனைவி ரூனு, 23. சுதர்சன், சூலுார் கள்ளப்பாளையம் ஒண்டிக்காரன் தோட்டத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சுதர்சன் வெளியில் சென்றிருந்த சமயம், அதே பகுதியில் வசித்து வரும், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித், 22, என்பவர், ரூனுவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த சுதர்சன், ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் இருவரையும் தாக்கினார். இதில், ரூனு இறந்தார். ரஞ்சித் படுகாயமடைந்தார். சுதர்சனை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE