கரூர்: காதப்பாறை பஞ்., தலைவர், தன் பொங்கல் பரிசு தொகுப்பை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள, 3.09 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் ஒன்றியம் காதப்பாறை பஞ்., தலைவர் கிருபாவதி தன் பொங்கல் பரிசுத் தொகையை, பஞ்.,யில் பணிபுரியும், தூய்மை பணியாளருக்கு வழங்கினார். அந்த பஞ்., பணிபுரியும், தூய்மை பணியாளர் லட்சுமி என்பருக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE