கரூர்: கரூர் அருகே தூய்மை பணியாளரை தாக்கிய, டீக்கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.
கரூர், வடிவேல் நகர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் முருகேசன். 45; ஆண்டாங் கோவில் கிழக்கு பஞ்சாயத்தில், ஒப்பந்த துப்புரவு பணியாளராக, பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, 8:00 மணிக்கு கோவை சாலை ஆண்டாங்கோவில் பகுதியில், சாக்கடை கால்வாயில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர், தகாத வார்த்தை பேசி முருகேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், டீக்கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE