கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட், ஜவஹர் பஜாரில் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, சாலையின் குறுக்கே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, இடையிடையே கம்பிகள் போடப்பட்டன. தற்போது, பல இடங்களில் கம்பிகள் உடைந்துள்ளன. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, உடைந்த கம்பிகளை மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE