கரூர்: கரூர், காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பை நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும், கரூரில் மழை பெய்து வரும் நிலையில், அவை அழுகாத வகையில், நாள்தோறும் அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE