நாமக்கல்: 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற முழக்கத்துடன், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று, நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தை துவக்கிய அவர், குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் முடித்து, நாமக்கல்லில், இரவு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது. அதற்கான எல்லா சான்றுகளும் இங்கு தெரிகிறது. மக்கள் நீதி மையத்தில் மாலைகள் கிடையாது, பொன்னாடைகள் கிடையாது. காலில் விழும் பழக்கமும் கிடையாது. ஊழல் ஊழல் என, நாம் யார் மீதும் பழிபோட்டுக் கொண்டு இருக்காமல், வழிகாட்டும் அரசியலை உருவாக்குவோம். அதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கு நீங்களும் தயாராகி விட்டீர்கள் என்பதற்கான எல்லா சாயலையும், சமிக்ஞைகளையும் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார். ராசிபுரத்தில், கமல்ஹாசன் பேசியதாவது: 30 வருடங்களுக்கு முன்பே இங்கு ரசிகர் மன்றம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ரத்த தான முகாம்தான் தமிழகம் முழுவதும் பரவியது. வறுமை கோட்டை அழிக்கிறேன் எனக்கூறி அரசியல்வாதிகள் அதை பாதுகாத்து வருகிறார்கள். ஆனால், மக்கள் நீதி மையம் வறுமை கோட்டை அழித்து செழுமை கோட்டை போடும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE