பள்ளிபாளையம்: ஒட்டமெத்தையில் விபத்து பகுதியாக உள்ள பிரிவு சாலையில், சென்டர் மீடியன் வைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையத்தில் இருந்த ஒட்டமெத்தை செல்லும் பிரதான சாலையில் வங்கிகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். சாலையின் ஓரிடத்தில் மூன்று வழித்தடங்கள் பிரிகின்றன. இது, திறந்தவெளியாக உள்ளதால், வாகனங்கள் தாறுமாறாகவும், வேகமாகவும் செல்கின்றன. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. டூ வீலரில் செல்வோரும், நடந்து செல்லும் மக்களும் அச்சப்படுகின்றனர். எனவே, இங்கு சென்டர் மீடியன், இல்லையெனில் பேரிகார்டு வைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE