புதுடில்லி: கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலை , மாநில பேரிடராக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில், சமீபத்தில், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள் மர்மமாக இறந்து கிடந்தன. அவற்றில் சில வாத்துகளை பரிசோதித்ததில், ஐந்து வாத்துகள், பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் 'எச்5என்8' வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க, சுற்றுப் பகுதிகளில் இருந்த, 12 ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டன. மேலும், 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பறவை காய்ச்சலை மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தீவிரமானதை தொடர்ந்து பேரிடராக அறிவித்ததுடன், உஷாராக இருக்கும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE