திருக்கோவிலுர் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருக்கோவிலுாரில் இளைஞர் பெருமன்றத்தின் பைக் ஊர்வலம் நடத்தினர்.
சந்தப்பேட்டை பி.டி.ஓ., அலுவலகத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மாவட்டத் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் ராமசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் கிப்ஸ், துணை செயலாளர் அருண்குமார், நகர அமைப்பாளர் ஜீவாராஜா, மாவட்ட குழு உறுப்பினர் முனியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE