விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மேற்பார்வையில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் பூர்ணராவ் முன்னிலையில், தொரவி கிராம ரேஷன்கடையில் நடந்த நிகழ்ச்சியில், வங்கி இயக்குனர் தொரவி சுப்ரமணி, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர் சிவகுமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.தொரவி காலனி பகுதி ரேஷன் கடையில் அ.தி.மு.க., கிளைச் செயலாளர்கள் அய்யனார் , சிவசுப்ரமணியன், பாசறை செயலாளர் அங்கப்பன் ஆகியோர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE