புதுச்சேரி : விறகு அடுப்பில் சுடு தண்ணீர் வைக்கும் போது, மூதாட்டியின் புடவையில் தீப்பற்றியதால் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரம், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவரது பாட்டி சுசிலா, 74; கடந்த 30ம் தேதி பாலச்சந்தர், அவரது தந்தை, தாய் ஆகியோர் வேலைக்குச் சென்றனர்.வீட்டில் தனியாக இருந்த சுசிலா, விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்தார். அப்போது, அவரது புடவையில் தீப்பற்றி, காயம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE