சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, ஆலையின் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கி அரவையை துவக்கி வைத்தார். மேலாண் இயக்குனர் மாவட்ட வருவாய் அதிகாரி சுப்ரமணியன், துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, நிர்வாகக்குழு இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.தலைமைக் கரும்பு அலுவலர் மணிமாறன் வரவேற்றார்.தொடர்ந்து யார்டில் கரும்புகளைப் போட்டு அரவை பணி துவங்கியது.விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள், டிராக்டர் ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், ஆலையின் அலுவலர்கள் முனியம்மாள், ரவிகிருஷ்ணன், ராஜதுரை, செல்வேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE