திண்டிவனம் : திண்டிவனம் 8 வது வார்டு, தீர்த்தகுளத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணியை, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்
.நிகழ்ச்சிக்கு, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் தீர்த்தக்குளம் குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்.கிளை செயலாளர் பாண்டியன், நகர ஜெ.,பேரவை துணை செயலாளர் தீபக், நகர இளைஞர் அணி துணை செயலாளர் பாலாஜி, நிர்வாகிகள் பிரகாஷ், லோகு, வேலன், சதீஷ், குணசெல்வம், நிர்மல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE