விழுப்புரம் : புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு காரில் மதுபானம் மற்றும் விஷசாராயம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து, விழுப்புரம் வழியாக மதுபானம் கடத்தப்படுவதாக விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர்கள் மது விலக்கு பிரிவு ராதிகா மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு புயல் பாலசந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு பனையபுரம் கூட்ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டி.என்., 24 ஏ 2293 பதிவெண் கொண்ட டாடா இண்டிகோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 236 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் எரிசாராயம் கடத்தி வருவது தெரிய வந்தது. அதனையடுத்து போலீசார், காரை ஓட்டி வந்தவரை விசாரித்ததில், அவர் திருக்கோவிலுார் சந்தபேட்டையை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ரமேஷ்,37; என்பதும், மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராயத்தை விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் ரமேைஷ கைது செய்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள், விஷசாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE