விழுப்புரம் : மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சென்னை சூளைமேட்டில் அகில இந்திய கோஜுரியோ கராத்தே டோ அசோசியேஷன் சார்பில் ஐந்தாவது மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது.இதில் விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளியின் புஷி ஷிட்டோரியோ கராத்தே பள்ளி மாணவர்கள், கட்டா மற்றும் குமுத்தே பிரிவுகளில் பங்கு பெற்று கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி தாளாளர் சோழன் பாராட்டினார். பயிற்சியாளர் சுரேஷ் உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE