திட்டக்குடி : இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் பாண்டியன், துணைத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து கோரிக்கை மனுவை தாசில்தார் சையது அபுதாகீரிடம் கொடுத்தனர். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE