புதுச்சத்திரம் : பூண்டியாங்குப்பத்தில் சுகாதார வளாகம் கட்ட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சத்திரம் பூண்டியாங்குப்பம் ரயில்வே கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து சீனுவாசபுரம், பள்ளிநீரோடை, கம்பளிமேடு, மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கடலுார், சிதம்பரம் பகுதிகளுக்கு பஸ் ஏறிச்செல்கின்றனர்.இந்த பஸ் நிறுத்தத்தில் பொது சுகாதார வளாகம் இல்லை.இதனால் இங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள், இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்கும் அவலம் உள்ளது.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.எனவே பூண்டியாங்குப்பம் ரயில்வே கேட் அருகே சுகாதார வளாகம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE