ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் எலைட் சிறப்பு பள்ளியில் மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்கள் நுழைவுத் தேர்வுக்கு எளிதில் தயாராகும் வகையில் ஏ.என்.டி., கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்படும் எலைட் பள்ளி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. இங்கு படிக்கும் 45 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பேராசிரியர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். எலைட் பள்ளி ஒருங்கிணைப்பாளர் பவராம்குமார் பங்கேற்றார். ஏ.என்.டி., அமைப்பின் தலைவர் அகிலன் பேசினார். ஆசிரியை பாண்டிச்செல்வி வரவேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE