கள்ளக்குறிச்சி : நல்லாத்தூர் ஊராட்சியில் உள்ள நுாலக கட்டி டம் திறக்கப்படாமல் இருப்பதால் புத்தகங்கள் யாருக்கும் பயன் இல்லாமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் தமிழக அரசின் சொந்த கட்டடத்தில் நுாலகம் கட்டப்பட்டுள்ளது. துவக்கத்தில் சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த இந்த நுாலகம், நுாலகர் யாரும் வராததால் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கிராமங்களில் நுாலகம் இருப்பதால் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகள் எழுதும் இளைஞர் களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது. தற்போது மூடிக்கிடப்பதால் நுாலகம் இருந்தும் புத்தகங்களை படிக்க முடியாத நிலை இருக்கின்றது. எனவே பூட்டிக்கிடக்கும் நுாலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE