ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். இதில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட மத்திய அரசிற்கு இணையான ஊதிய மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.இதனை வலியுறுத்தி ஜன., 9 ராமநாதபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அருள் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE