திருக்கோவிலுார் : சித்தப்பட்டினத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான விளக்கக் கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த சித்தப்பட்டினம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார் பில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், குழுக்களின் பணிகள் பற்றியும் விளக்கக் கூட்டம் நடந்தது. திட்ட அலுவலர் பாலகுமாரன் தலைமை தாங்கினார். கலையரசி விளக்க உரையாற்றினார். விவசாய பிரதிநிதி கோபாலன் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE