ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்து, பிளஸ் 2 வகுப்பு பாடம் நடத்த பள்ளிகள் திறப்பது குறித்து ஜன.8ல் மாணவர்களின் பெற்றோர் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது ஆன் லைன் மூலம் வகுப்பு நடக்கிறது.பொங்கல் பண்டிகைக்கு பிறகு பத்து, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர் களிடம்கருத்துகளை கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.,8ல் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பத்து, பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறை பின்பற்றி தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்த கருத்துக்களை பெற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE