கோவை:காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.கோவையில் தனிநபர் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பாலம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மாநகரில், 320 போக்குவரத்து போலீசார் பணியிடங்கள் உள்ளன.சிக்னல்களை இயக்குவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட, பல்வேறு பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.குறிப்பாக, சிக்னல்கள் இல்லாத இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிப்பதில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் துறையில், 40 சதவீத அதாவது, 130 பணியிடங்கள் காலியாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மென்மேலும் சிக்கலாகி வருகிறது.இதை தவிர்க்க, காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர் போக்குவரத்து போலீசார்.இது குறித்து,கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசுவிடம் கேட்டதற்கு, ''போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதில், எவ்வித பிரச்னையும் இல்லை. தேவைப்படும் போது ஆயுதப்படை போலீசார் பணியமர்த்தப்படுவர். தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசார், பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். அவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்,'' என்கிறார்.எப்படியோ... நெரிசலுக்கு தீர்வு கிடைத்தால் சரி!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE