திருப்பூர்:மத்திய அரசு வழங்கியுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வினியோக பணி துவங்கியுள்ளது.மத்திய, மாநில அரசுகள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட்' அடையாள அட்டையை, தமிழக அரசு வழங்கி வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். முதல்கட்டமாக, 6,000 பேருக்கான அடையாள அட்டை வந்துள்ளது. அவற்றை மாற்றுத்திறனாளியின் முகவரிக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ''ஸ்மார்ட்' அடையாள அட்டை, 6,000 பேருக்கு வந்துள்ளது. அவர்களுடைய எண்ணில் தொடர்பு கொண்டு, முகவரியை சரிபார்த்த பின், தபாலில் அனுப்பி வைக்கிறோம். சிலர் வெளியூரில் இருப்பதால், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளோம். முதல்கட்டமாக, முகவரி சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE