மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், அரசு பொது மருத்துவமனையில், சித்த மருத்துவ பிரிவு இயங்குகிறது. இது மட்டுமின்றி, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறையின், ஆயுஷ் நல்வாழ்வு மையமும், மூன்றாண்டுகளாக, தனியே இயங்குகிறது.சித்த மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனைக்கான இம்மையத்திற்கு, நிரந்தர டாக்டர் நியமிக்கப்படவில்லை.
சதுரங்கப்பட்டினம், வட்டார ஆரம்ப சுகாதார மைய, ஆயுஷ் நல்வாழ்வு மைய மருத்துவர் இங்கு, கூடுதல் பொறுப்பு வகித்து, வாரத்தில் இரு நாட்களே இயங்கியது.இந்நிலையில், ஆயுஷ் மைய செயல்பாடு கருதி, மருத்துவர் வானதி நாச்சியார், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து நாளிலும் இம்மையம் இயங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE