திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், டிச., 31ம் தேதி படித் திருவிழாவும், ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.
இவ்விழாவில், பக்தர்கள் உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மலைக்கோவிலில் உண்டியல்கள் திறந்து, கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 70 லட்சத்து, 35 ஆயிரத்து, 231 ரூபாய் ரொக்கம், 243 கிராம் தங்கம், 5,420 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE