அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டியில் உள்ள சுவாமி விவேகானந்த சேவாலயத்தில், அன்னை சாரதாதேவியின், 168ம் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, காலை 5:00 மணிக்கு மங்கல ஆரத்தி, பஜனை திருப்பாவை பாராயணம், தொடர்ந்து, சிறப்பு பூஜை, அர்ச்சனை, ஆரதி, அன்னைக்கு ஆயிரத்து எட்டு போற்றி குங்கும பூஜை நடந்தது.மாலை, 6:30 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் நுாற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் தத்தாத்ரேயன், 'அன்புள்ள அம்மா' என்ற தலைப்பில் பேசினார். சேவாலய நிர்வாகி செந்தில்நாதன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE