வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் நேற்று நடந்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்தில், 38 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.வெள்ளகோவில் வேளாண் விற்பனை கூடத்துக்கு, 38 ஆயிரத்து 206 கிலோ தேங்காய் வரத்து வந்தது.இது, 37 லட்சத்து 81 ஆயிரத்து 785 ரூபாய்க்கு விற்பனையானது. முதல் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ 125.65 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 75.90 ரூபாய்க்கும், சராசரியாக 122.65 ரூபாய்க்கும், விற்பனையானது.இந்த ஏலத்தில், 100 விவசாயிகள் மற்றும் 19 வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்ததாக, வேளாண் விற்பனை கூட, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE