திருவான்மியூர் : திருவான்மியூரில், சட்ட விரோதமாக மசாஜ் சென்டரில், பாலியல் தொழில் நடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில், டிச., 18ம் தேதி, ஒரு மசாஜ் சென்டர் திறக்கப்பட்டது. அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டதுடன், அங்கு, பாலியல் தொழில் நடந்துள்ளது.ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேற்று, திருவான்மியூர்போலீசார், அதிரடி சோதனை நடத்தினர்.
மசாஜ் சென்டர்நடத்தி வந்த, அம்பத்துாரைச் சேர்ந்த பாலாஜி, 31, என்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.அங்கு மீட்கப்பட்ட மூன்று பெண்களை, அரசு காப்பகத்திற்கு அனுப்பினர்.மேலும், சட்ட விரோதமாக, மசாஜ் சென்டர் நடத்த அனுமதி அளித்த, மாநகராட்சி அதிகாரிகளிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE