ஈரோடு:ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 2ல், வரி வசூலிக்கும் ஊழியராக இருப்பவர் செல்லதுரை, 45; இரவு வாட்ச்மேனாக பணிபுரிந்த இவர், கடந்த டிச., மாதம், இப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.
ஈரோடு, சூளையைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி முரளி, 38; குடிநீர் இணைப்பு கேட்டு, செல்லதுரையை அணுகினார். அவரிடம், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.முரளி, ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய, 15 ஆயிரம் ரூபாயை, செல்லதுரையிடம் நேற்று மாலை வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்லதுரையை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE