கோவை:சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில்,
4 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
கோவை, இருகூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 62. உடல்நிலை பாதிக்கப்பட்ட தன் மனைவியை, சிங்காநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மனைவியை மருத்துவமனையில் சேர்த்த பின், பாலசுப்ரமணியம் மற்றும் அவரது பேரன் ஆதவன், 4 ஆகிய இருவரும், எதிர்புறம் இருந்த வங்கிக்கு நடந்து சென்றனர்.
அப்போது, கண்ணம்பாளையத்தில் இருந்து, கோவை நோக்கி வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில், ஆதவன் மற்றும் ஒண்டிபுதுாரைச் சேர்ந்த சத்யராஜ், 20, சம்பவ இடத்திலேயே பலியாயினர். பாலசுப்ரமணியம் படுகாயம் அடைந்தார்.
மேலும் கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மற்றும் இரு பைக்குகள் மீது மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ரமேஷ், 42, என்பவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE