தேனி:ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடத்த இருந்த போராட்டம் மக்கள் நலன் கருதி ஜன. 21க்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
ரேஷன்கடை பணியாளர்கள் சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி இன்று (ஜன. 6 ல் ) சென்னை, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் காத்திருக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் பொங்கல் பரிசு வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
தேனி மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மக்கள் நலன்கருதி இன்று நடக்க இருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜன. 21 சென்னை அரசு விருந்தினர் மாளிகை முன் போராட்டம் நடத்த மாநில மையம் முடிவு செய்துள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE