பெருங்குடி : உணவு பாதுகாப்பு துறை சார்பில், ராஜிவ் காந்தி சாலையில், பாரம்பரிய உணவு குறித்து, வாகனத்தில் எல்.இ.டி., திரை மூலம், நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நம் பாரம்பரியமான உணவு முறை முக்கிய காரணமாக உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்பு துறை, இது சம்பந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட இடங்களில், பாரம்பரிய உணவு குறித்து, வாகனத்தில் எல்.இ.டி., திரை மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நேற்று கொட்டும் மழையிலும், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வாங்க வந்த கூட்டத்தை குறி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுகுமார் கூறியதாவது:உணவே மருந்து என்ற அடிப்படையில் நாம் வாழ்ந்து வந்தோம். மேலை நாட்டு கலாசாரம் பரவியால், உணவு முறை மாறிவிட்டது; நோய்களும் அதிகரித்து விட்டன.
எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பாரம்பரியமான உணவை உண்ணும் வகையில், மக்களிடம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, வாகனத்தில் எல்.இ.டி., திரை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE