சென்னை : முத்துாட் எம்.ஜார்ஜ் அறக்கட்டளை, 'முத்துாட் விவாஹாசம்மனம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
நாட்டிலேயே மிகப்பெரிய தங்க நகைக்கடன் நிறுவனமாக, முத்துாட் பைனான்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், தன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாட்டின் கீழ், முத்துாட் எம்.ஜார்ஜ் அறக்கட்டளையை நடத்தி வருகிறது.இந்த அறக்கட்டளை, முத்துாட் விவாஹா சம்மனம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம், விதவையர், தங்கள் மகளின் திருமண தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.இந்த திட்டத்தின் கீழ், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த, 12 சிறுமியருக்கு தலா, 1 லட்சம் ரூபாய், பொருளாதர உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2019 - 20ம் நிதியாண்டில், திருமண உதவியாக, 48.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை, அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சியில், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., வி.என்.ரவி, முத்துாட் பைனான்ஸ் நிறுவன சென்னை தென்மண்டல மேலாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE