உடுமலை,:உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.உடுமலை ஒன்றியம், சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலாளர் குறிச்சிக்கோட்டைக்கும், குறிச்சிக்கோட்டை செயலாளர் சின்னவீரம்பட்டிக்கும், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைத்தும், ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை துவங்கிய போராட்டம், மாலை வரை தொடர்ந்தது.கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, சங்கத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE