புதுடில்லி:பினாமி சொத்து வழக்கு தொடர்பாக ராபர்ட் வாத்ராவிடம் வருமானத்துறை அதிகாரிகள் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும் அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா ராஜஸ்தான் மாநிலத்தில் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.அவர் மீது பினாமி சொத்து தடுப்பு சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்துஉள்ளது.
பணமோசடிதடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகக் கோரி வாத்ராவுக்கு வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை காரணம் காட்டி விசாரணைக்கு வாத்ரா ஆஜராகவில்லை.நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள வாத்ராவின் வீட்டுக்கு சென்றனர்.
வழக்கு தொடர்பாக வாத்ராவிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.இரண்டாவது நாளாக நேற்றும் வாத்ரா வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.இது பற்றி வாத்ரா கூறுகையில் ''விவசாயிகள் போராட்டம் உட்பட முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப வருமானவரித் துறை மூலம் விசாரணை என்ற பெயரில் என்னை அவமானப்படுத்த மத்தியஅரசு முயற்சிக்கிறது'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE