மதுரை:மதுரை செல்லுார் ரங்கராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
நான் தமிழக அரசின் பதிவு பெற்ற சித்த மருத்துவர். சித்த மருத்துவ பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 'ஏ' பிரிவு, சித்த மருத்துவத்தில் அனுபவம் பெற்றவர்களுக்கு 'பி' பிரிவு பதிவுச் சான்று வழங்கப்பட்டது.பாரம்பரிய சித்த மருத்துவம் அழிந்துவிடாமல் பாதுகாக்க, பதிவு பெற்றவர்கள் வாரிசுகளுக்கு அம்மருத்துவத்தை கற்றுக் கொடுக்கின்றனர்.
போதிய வருவாய் ஈட்ட முடியவில்லை. அவர்களுக்கு அரசின் அங்கீகாரம் இல்லை. கொரோனா, டெங்கு போன்ற நோய் தடுப்பிற்கு சித்தா மருந்து பயன்படுகிறது. எங்கள் வாரிசுகளை அங்கீகரிக்க பதிவுச் சான்று வழங்கி, சித்த மருத்துவ சேவை தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு தமிழக சுகாதாரத்துறை செயலாளர், சித்த மருத்துவக் கவுன்சில் பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி பிப்.,1 க்கு ஒத்திவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE