மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விளாச்சேரி மொட்டமலையில் காலி செய்ய கூறி வீட்டை அடித்து உடைத்து தி.மு.க., கிளை செயலாளர் குரும்பன் சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மொட்டமலை பாண்டி மனைவி சித்ரா 40, துணி தேய்க்கும் வேலை செய்கிறார். இவர்கள் குடியிருக்கும் வீடு தொடர்பாக பிரச்னை இருந்தது. இரு நாட்களுக்குமுன் இவர்கள் வெளியூர் சென்றனர். அவர்கள் வீட்டை விளாச்சேரி ஊராட்சி துணை தலைவர்முத்துலட்சுமியின் கணவர் குரும்பன் (தி.மு.க., கிளை செயலாளர்) மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு அடித்து உடைத்தனர்.
சித்ரா தரப்பினர் ஆஸ்டின்பட்டி போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருமங்கலம் டி.எஸ்.பி., வினோதினியிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்படி ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE