மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தாலுகாவில், வி.ஏ.ஓ., அலுவலகங்களில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், முதியோர் உதவித்தொகை கேட்டு அதிகமான மனுக்கள் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையம் தாலுகாவில், 19 வி.ஏ.ஓ., அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு திங்கட்கிழமையும் கிராம நிர்வாக அலுவலகங்களில், மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த முகாமில், வீட்டுமனைப் பட்டா, உதவி தொகை கேட்பு, வனவிலங்குகள் தொல்லைக்கு தீர்வு கோரி என, மனுக்கள் வழங்கப்பட்டன. இதில், முதியோர் உதவித்தொகை கேட்ட மனுக்கள் அதிகம் இருந்தன.''பொங்கல் பரிசு பொருட்களை பெற்று பயனடை வேண்டும்,'' என, மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE