மதுரை:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியில் கைத்தறி தொழில் பிரதானம். ஜக்கம்பட்டியில் சிலர் அரசின் அனுமதியின்றிநடத்தும்சாயப்பட்டறைகளில்கழிவு நீரை சுத்திகரிக்காமல் கால்வாய்களில் வெளியேற்றுகின்றனர். இதனால்நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசடைகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு புகார் அனுப்பினேன். சாயப்பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர், தேனி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE