நாமக்கல்:'பொது ஊரடங்கு உத்தரவு காலத்தில், ஆறு மாதமாக இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அனைத்து வாகனங்களுக்கும், இரண்டு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் செல்ல ராசாமணி கூறினார்.
நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் மார்ச், 25 முதல், செப்., 30 வரை, மாநிலம் முழுதும், தொடர் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டதை அடுத்து, 50 சதவீதம் வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கு காரணமாக, ஆறு மாதம் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததால், அனைத்து வாகனங்களும், இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
அதனால், ஏப்.,1 முதல், ஜூன், 30; ஜூலை, 1 முதல், செப்., 30 வரை என,இரண்டு காலாண்டு வரியையும் ரத்து செய்ய வேண்டும் என, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தும், எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
தெலுங்கானா மாநில அரசு, ஆறு மாதத்துக்கு உண்டான, இரண்டு காலாண்டு வரியை ரத்து செய்தும், ஏற்கனவே, இரண்டு காலாண்டு வரியைசெலுத்தியவர்களுக்கு, எதிர்வரும் காலாண்டில் நேர் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நலிவடைந்து வரும் போக்குவரத்து துறையை மேம்படுத்த, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE