பேரையூர் : பேரையூர் தாலுகாவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் மூலிகை செடிகளை பறித்து விற்று வருவாய் ஈட்டுகின்றனர்.
இத்தாலுகாவில் விவசாயம், கூலி வேலையை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்கு இத்தொழில், வருமானம் ஈட்டும் மற்றொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. தரிசு நிலங்களில் கிடைக்கும் மூலிகை செடிகளை சேகரிக்கின்றனர்.ஆவாரம்பூ, நெருஞ்சி, துளசி, குச்சிகுளை, சாரைவேர், மஞ்சனித்தினி இலை, வேப்பஇலை, காட்டுநொச்சி, செந்தட்டி, ஆடாதோடா, கீழாநெல்லி, செம்பருத்தி, மருதாணி, தூதுவளை, நித்திய கல்யாணி, அவுரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட மூலிகைகள் அவர்கள் பறித்து விற்கின்றனர்.
அவற்றை வியாபாரிகள் வாங்கி வெளிமாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE