திருப்பரங்குன்றம் : மதுரை ஆரப்பாளையம் முருகேசன் மகன் பாலசுப்பிரமணியன் 22. பி.பி.ஏ., பட்டதாரி. இவர் நேற்று திருப்பரங்குன்றத்திலிருந்து வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.
பைக்காரா அருகே ரோட்டிலுள்ள பள்ளங்களை தவிர்க்க பிரேக் பிடித்தபோது பின்னால் வந்த டேங்கர்லாரி டூவீலரில் மோதியது. சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணியன் இறந்தார்.லாரி டிரைவர் ஆனையூர் விஜய பாண்டியை போக்குவரத்து போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஆபத்தான பள்ளங்கள்: பைக்காரா பகுதி மெயின் ரோட்டில் கடந்த மாதம் பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பள்ளங்கள் உண்டாகின. இந்த பள்ளங்களால் டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைவதுடன், விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கிறது. அந்த பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை தேவை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE