திண்டுக்கல் : ரெட்டியார் சத்திரம் அருகே குடும்பத் தகராறில் தாயை கொலை செய்த மகன் ரத்தினவேல் 47, கைது செய்யப்பட்டார்.
ரெட்டியார் சத்திரம் அருகே தோப்புபட்டியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் 71. தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் ரத்தினவேல். இவர் மனைவிமற்றும்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.முத்தம்மாவுக்கும், மகன் ரத்தினவேலுவுக்கும்இடையே பல ஆண்டுகளாக தகராறு உள்ளது. இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த ரத்தினவேல், வழக்கம்போல தாயுடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் தாயை கீழே தள்ளி தாக்கினார்.இதில் மயக்கமடைந்த முத்தம்மாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். போலீசார் ரத்தினவேலுவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE