புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியது.
மேலும் ஒரே நாளில் 18,088 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 932 பேராக உயர்ந்தது. 2.27 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,50,114 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.36 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 2.19 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சோதனைகள்
இந்தியாவில் நேற்று (ஜன.,05) ஒரே நாளில் 9,31,408 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 17 கோடியே 74 லட்சத்து 63 ஆயிரத்து 405 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE